Posts

Showing posts from November, 2018

காந்தள் இயக்கம் (தயாரிப்பு)

Image
காந்தள் இயக்கம் (தயாரிப்பு)                       அனைத்து வகையான மொபைல் போன்களுக்காகவும் தமிழ் வடிவமைப்பு வடிவமைக்கப்பட்ட மொபைல் பேக் வழக்கை நாங்கள் விற்பனை செய்கிறோம் காந்தள் இயக்கம் என்ற பெயரில்  பிராண்ட் ஆகும். https://www.olx.in/item/kandhal-iyakkam-mobile-back-case-ID1py0PN.html  #காந்தள்இயக்கம் #kandhaliyakkam

காந்தள்இயக்கம் (க)

Image
 #காந்தள்இயக்கம்  #kandhaliyakkam

காந்தள்இயக்கம்

Image
 #காந்தள்இயக்கம்  #kandhaliyakkam

வளர்ச்சியின் வெற்றி (கதை - '௬')6

வளர்ச்சியின் வெற்றி ஒரு காட்டின் கதை  - '௬'                                             சிங்கங்கள் எல்லாம் மான்களை வேட்டையாடி ஆடிப் பணமாய் மாற்றிச் சேர்த்தன. புலிகளுக்கும், சிங்கங்களுக்கும் வேட்டையாடும் நிலப்பரப்பில் கடுமையான வன்மை ஏற்பட்டு அடிக்கடி ஒன்றொடொன்று போர் புரிந்தன. யானைகள் எப்பொழுதும் சங்கிலிகளுடன் காட்டில் மரங்களைச் சாய்த்து இழுத்து வந்து கொண்டிருந்தன. மான்களும், மாடுகளும், வரிக்குதிரைகளும் தங்கள் பாதுகாப்பிற்கென ஓநாய்களுக்குச் சம்பளம் கொடுத்துக் காவலாளிகளாக்கின. அவை தம் இனத்தைப் பாதுகாப்பதற்குப் பணம் தேவையென்பதால் பால் பண்ணை வைத்து மனிதனிடம் அதைக் காசாக்கின. அவற்றின் குழந்தைகள் ஊட்டச் சத்து இல்லாத சவலைக்குழந்தைகளானாலும், உயிரோடும் பாதுகாப்போடும் இருக்க முடிந்ததை நினைத்து மகிழ்ந்தன. பழம் தூக்கித் தூக்கி முதுகு வளைந்து விட்ட குரங்குகள் தாங்கள் பறித்த பழங்கள் விலை அதிகமானதால், மரத்தின் வேர்களில் உள்ள கிழங்குகளைச் சாப்பிட்டு வாழப் பழகி விட்டன.   ...

வியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு

Image
நாம் - முதல் தலைமுறை தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை பரன் + பரை - ஏழாம் தலைமுறை பரன் + பரை = பரம்பரை ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால், ஏழு தலைமுறை - 480 வருடங்கள். ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..(கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)ஆக, பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக என்று பொருள் வரும். வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை... இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு. #காந்தள்இயக்கம்     #kandhaliyakkam

முதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே!

Image
                         உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது. ௰. வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin) ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது.அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம். ௯. வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian) இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம். ௮. வது இடத்தில் கொரியன் மொழி (Korian) கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ௭. வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew) இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.ம...

ஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்!

Image
௧. அறம் செய விரும்பு / 1. Lea to love virtue. ௨. ஆறுவது சினம் / 2. Control anger. ௩ . இயல்வது கரவேல் / 3. Don't forget Charity. ௪. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy. ௫. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence. ௬. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation. ௭. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise leaing. ௮. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload. ௯. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast. ௰. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great. ௰௧. ஓதுவது ஒழியேல் / 11. Disce the good and lea. ௰௨. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy. ௰௩. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange. ௰௪. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop. ௰௫. ஙப் போல் வளை / 15. Bend to befriend. ௰௬. சனி நீராடு / 16. Shower regularly. ௰௭. ஞயம்பட உரை / 17. Sweeten your speech. ௰௮. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home. ௰௯. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best. ௨௰. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents. ௨௰௧. நன்றி மறவேல்...

தமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்!

Image
                                                 தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000 மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். மொழித்துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப் பரிமாறும் ஊமையர் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள். தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம் தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும், நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின் உச்சக்கட்டம் எ...

தமிழ் மொழியை குழந்தைகளுக்கு கற்றுத் தருவது எப்படி?

Image
                  செம்மொழியாம் நம் தமிழ் மொழி உலகிலேயே மிகப் பழமையான மொழி. நம் மொழி என்றென்றும் வாழவதற்கு முதலில் பெற்றோர்கள் தமிழ் மொழியின் சிறப்புகளை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். பரவலாக பல நாடுகளில் ஆங்கிலம் பேசப்படுவதால் நாம் வர்களுடன் தொடர்பு மற்றும் நட்பு வைத்துக் கொள்ள ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதனால் தாய்மொழிகளில் பின்தங்கி விடுகிறோம். முதலில் பெற்றோர்கள் குழந்தைகளை தாய்மொழியில் பேச ஊக்குவிக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளிடம் தமிழில் பேசுவது மிக அவசியம். முக்கியமாக வீடுகளில் அவர்கள் தமிழில் பேச வேண்டும். சிறு வயது முதலே தமிழில் கேட்டு தமிழில் பதில் சொல்லி வளரும் பிள்ளைகள் தமிழை நன்றாகவே பேசுகிறார்கள். குழந்தைகள் தமிழ் மொழியைக் கற்க பெற்றோர்களும், ஆசிரியர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். பல வழிகளில் குழந்தைகளுக்கு தமிழைக் கற்றுக் கொடுக்கலாம். 1 வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எளிதில் சொல்லக் கூடிய அம்மா, அப்பா, உறவுமுறை, வணக்கம், டாடா போன்ற சொற்களை சொல்லிக் கொடுக்கலாம். சிறு வயதில் குழ...

50 ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் விட்ட மூச்சு காத்து வீண் போகாதா?

Image
                    துங்கி வழியும் அந்த பேருந்து நெரிசலில், ஓரமாய் ஒதுங்கி தேய்ந்தும், வண்ணம் போயும், இப்போதோ பிறகோ என்று தொங்கும் அந்த திருக்குறள் பலகையில் தான் இன்றைய தமிழர்களின் தமிழ் பயன்பாடு மீதம் இருக்கிறது. தென்றலாய் , தேனாய், அமுதாய், காயாய், கனியாய் எல்லமுமாய் இனித்த தமிழ் இன்று வெள்ளைக்காரனின் புயலில் புழுதியாய் போய்விட்டது, குறைந்தபட்சம் பெயர் கூட தமிழில் தாங்காத தமிழர்களாக இந்த சமுகம் மாறி நிற்கிறது. மணக்கவரும் தென்றலிலே குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை? தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை!! என்று தமிழ் புலவர்களையும், தமிழ் அறிஞர்களையும் புலம்ப வைத்து, மனம் வெந்தது தான் இன்றைய தமிழர்களின் தமிழ் பயன்பாடு இருக்கிறது. சாலை இல்லை, விரிவு இல்லை, பேருந்து இல்லை, மகிழுந்து இல்லை, சாளரம் இல்லை, உண்ணும் உணவு கூட சோரு இல்லை, சாதம் என்று சமஸ்கிருதம் ஆகிபோனது, சோறு அவனுக்கு சுடு சொல்லாய் ஆனது, மொத்தத்தில் தமிழன் தமிங்களன் ஆகிபோனான். மனிதனால் இப்படி கூட சிந்திக்க முடியுமா? இது உண்மை தானா.. என...

அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி..!!!

Image
28-10-2012 ஆம் நாளிட்ட ஆங்கில ஏடான இந்து நாளிதழில் வந்திருந்த ஒரு கட்டுரை. தலைப்பு : “POTSHRED WITH TAMIL-BRAHMI SCRIPT FOUND IN OMAN”. அதாவது ஓமன் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட ஓட்டுச்சில்லில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் என்பது அதன் பொருள். இதைப்பற்றி இந்துவின் இணையதள இதழிலும் வந்தது. இந்தச் செய்தி உண்மையிலேயே தமிழின் தொன்மையையும் தமிழர்கள் கடல் கடந்து மிகப்பழங்காலத்திலேயே பல நாடுகளில் தங்கள் குடியேற்றத்தைச் செய்து கால் பதித்து கலாச்சாரத்தைப் பதித்திருக்கிறார்கள் என்பது ஒவ்வொரு தமிழனும் நெஞ்சு நிமிர்த்தி பெருமை கொள்ளத்தக்கது. மேற்கூறிய செய்திகளில் தெரிய வருவது நம்மை அதிசயத்தில் உறைய வைக்கிறது. இப்படிப்பட்ட தமிழ் எழுத்துக்கள் தாங்கிய ஓட்டுச்சில்லுகள் மத்தியத் தரைக் கடலின் மேற்குப்பகுதியான எகிப்து முதல் கிழக்குப்பகுதியில் தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகள் வரை பல்வேறு இடங்களில் கிடைக்கின்றன என்றும் இதற்கான செய்திகள் அவ்வப்போது இந்து நளிதழ் உட்பட பல்வேறு மேலை நாட்டு செய்தித்தாள்களிலும் வெளிவந்திருக்கின்றன. அடடா! “யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்று தமிழன் சும்மா பாட்டாக மட்டும் பாடி வை...

சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்

Image
1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. குவி என்கிற திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வசிக்கும் அந்த ஊருக்குள் என் கால்கள் என்னையும் அறியாமல் சென்றன. அதிலிருந்து ஊர்ப் பெயர்கள் மீது காதல் கொண்டேன். எங்கு மாறுதலாகிச் சென்றாலும் ஊர்ப் பெயர்கள் அடங்கிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் புத்தகங்களைத் தூக்கிச் சென்றேன்.மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான். புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக உளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும், சுமந்து சென்ற ஊர்ப் பெயர்களும் சொல்வது மனித குலத்தின் வரலாறு.ஈரானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஊர்ப் பெயர்கள், அப்படியே ஒரிசாவில் கொனார்க்கில் உள்ள சூரியக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பதைக் கண்டேன். இதன் சாத்தியம் என்னை ஆச்சரியப்படுத்தியது.பின்னர், தமிழ்நாடு – கேரள எல்லையில் ...

தமிழ் தெரியாத ஏக்கத்தில் கயானா தமிழ் வம்சாவளி பிரதமர்!

Image
                                                                அண்மையில் கயானா நாட்டின் முதல் தமிழராக பிரதமர் பதவியை மோசஸ் வீராசாமி நாகமுத்து ஏற்றதை அறிந்து, தில்லி தமிழ் வழக்குரைஞர்கள் சங்கத்தின் செயலர் வே. ராம் சங்கர், அவரை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைக் கூறினார். இளம் வழக்குரைஞரான ராம் சங்கர், கயானா பிரதமர் நாகமுத்துவைச் சந்தித்த தனது அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டவை:                     அண்மையில் கனடா சென்றிருந்தேன். அப்போது, அங்கு கயானா நாட்டின் பெண் வழக்குரைஞரைச் சந்தித்தேன். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவரது தந்தை கயானா குடியரசின் பிரதமராக பதவியேற்றுள்ளதையும், அவர் பூர்வீகத் தமிழர் என்பதையும் கூறியதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். அந்நிய மண்ணில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் பிரதமராக முதல் முறையாக வந்துள்ளதால் அவரைப் பாராட்ட நினைத்தேன். இதைத் தொடர்ந்து,...

தமிழகத்தின் சுவையான உணவுகளும்... அவற்றின் இடங்களும்!

Image
தமிழகத்தில் எந்த மாவட்டத்தில், எந்த உணவு சிறப்பு என்று ருசியுங்கள்..! 1. சிம்மக்கல் - கறி தோசை, கோலா உருண்டை 2. நடுக்கடை - இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா 3. சிதம்பரம் -கொத்சு 4. புத்தூர் -அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும் 5. திருவானைக்கா - ஒரு ஜோடி நெய் தோசை 6. கும்பகோணம் - பூரி-பாஸந்தி 7. ஸ்ரீரங்கம் - இட்லி பொட்டலம் 8. மன்னார்குடி - அல்வா 9. கூத்தாநல்லூர் - தம்ரூட் 10. நீடாமங்கலம் - பால்திரட்டு 11. திருவையாறு - அசோகா 12. கும்பகோணம் - டிகிரி காபி 13. விருதுநகர் - பொரிச்ச பரோட்டா 14. கோவில்பட்டி - கடலை மிட்டாய் 15. ஆம்பூர் - தம் பிரியாணி 16. நாகர்கோவில் - அடை அவியல் 17. சாத்தூர் - சீவல் 18. திருநெல்வேலி - இருட்டுக் கடை அல்வா 19. ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா 20. செங்கோட்டை - பார்டர் கடை பரோட்டா, நாட்டுக் கோழி வறுவ ல் 21. மணப்பாறை - அரிசி முறுக்கு 22. கீழக்கரை - ரொதல்அல்வா 23. திண்டுக்கல் - தலப்பாக் கட்டி பிரியாணி 24. பண்ருட்டி - முந்திரி சாம்பார் 25. மதுரை - ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால் 26. சாயல்குடி - கருப்பட்டி காபி 27. பரமக்குடி - சிலோன் பரோட்டா, சி...

தமிழ் கலாசாரத்தைப் பறைசாற்றும் கழுகுமலை வெட்டுவான் கோயில்!

Image
தமிழகத்தின் வீரம் செறிந்த நெல்லைச் சீமையில் கோவில்பட்டி - சங்கரன்கோவில் சாலையில் அமைந்த பழம்பெரும் ஊர் கழுகுமலை. நாளந்தா, தட்சசீலம் போன்ற ஆதியில் அமைந்த கலாசாலைகள் போன்று சமண கலாசாலை அமைந்த இடம். சிலகாலம் சமணம், பௌத்தம், இறுதியாக சைவம் என்ற மாற்றங்களோடு அமைந்த பேரூர்தான் இந்த கழுகுமலை. பருத்தி அரவை ஆலைகளும், தீப்பெட்டி உற்பத்தித் தொழிலும், மாட்டுத் தாவணிகளும், சத்திரங்களும், மடங்களும் கோயிலும் அமைந்தது இந்த ஊர். இந்த ஊரில் செய்யப்படும் தின்பண்டமான காரச்சேவும், பட்டர்சேவும், கருப்பட்டிப்பாகு மிட்டாயும் சுவை மிகுந்தவை. சைவத் தலமான இவ்வூருக்கு தினமும் நூற்றுக்கணக்கில் பயணிகள் வருகின்றனர். இவ்வூருக்கு கழுகாசலம், தென்பழனி, சம்பாதி சேத்திரம், கஜமுகபர்வதம், பவணகிரி, உவணகிரி, அரைமலை, திருநெற்சுரம், பெருநெற்சுரம் என்று பழங்காலப் பெயர்கள் அமைந்திருந்ததற்கான சான்றுகள் உள்ளன. காவடிச்சிந்து அண்ணாமலை ரெட்டியார் இந்தக் கழுகுமலையை நோக்கி காவடி ஏந்தி நடைபயணமாக வந்தபோது பாடிய பாடலே காவடிச்சிந்து. கழுகுமலையின் சிறப்பை தன்னுடைய பாக்களில் சொல்லியுள்ளார்.  கதலி கமுகுசூழ் வயற்குளே அளி ...

ராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழிகள்!

Image
ராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான புதை விடங்களில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் அருகே உள்ள தேவ தானத்தில் இருந்து சாஸ்தா கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள நெடும்பரம்பு மலை அருகே உள்ள செம்மண் குன்றில் 50-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அப்பகுதியில் ஆய்வு செய்து வரும் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் போ.கந்தசாமி கூறியதாவது: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதி தேவி ஆற்றின் வளத்தால் செம்மண் பூமியாகக் காணப்படுகிறது. இங் குள்ள மண் குன்றில் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்கால மனிதர்களின் சடலம், எலும்புத் துண்டுகளை முதுமக்கள் தாழியில் வைத்து அடக்கம் செய் துள்ளனர். அதில் மனித எலும்புத் துண்டு கள், பல சிறுசிறு மண் கலயங் களில் தானியங்கள், இறந்து போன வர்கள் பயன்படுத்திய இரும்புப் பொருட்களான சூரி, கத்தி, பண்ணை, அரிவாள் ஆகியவை யும் கிடைத்துள்ளன. இக்குன்றின் மேற்பரப்பில் சிறு மண்பாண்டங் கள், மண் கலயங்கள், உலை மூடி, விளக்குப்போடும் க...