துங்கி வழியும் அந்த பேருந்து நெரிசலில், ஓரமாய் ஒதுங்கி தேய்ந்தும், வண்ணம் போயும், இப்போதோ பிறகோ என்று தொங்கும் அந்த திருக்குறள் பலகையில் தான் இன்றைய தமிழர்களின் தமிழ் பயன்பாடு மீதம் இருக்கிறது. தென்றலாய் , தேனாய், அமுதாய், காயாய், கனியாய் எல்லமுமாய் இனித்த தமிழ் இன்று வெள்ளைக்காரனின் புயலில் புழுதியாய் போய்விட்டது, குறைந்தபட்சம் பெயர் கூட தமிழில் தாங்காத தமிழர்களாக இந்த சமுகம் மாறி நிற்கிறது. மணக்கவரும் தென்றலிலே குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை? தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை!! என்று தமிழ் புலவர்களையும், தமிழ் அறிஞர்களையும் புலம்ப வைத்து, மனம் வெந்தது தான் இன்றைய தமிழர்களின் தமிழ் பயன்பாடு இருக்கிறது. சாலை இல்லை, விரிவு இல்லை, பேருந்து இல்லை, மகிழுந்து இல்லை, சாளரம் இல்லை, உண்ணும் உணவு கூட சோரு இல்லை, சாதம் என்று சமஸ்கிருதம் ஆகிபோனது, சோறு அவனுக்கு சுடு சொல்லாய் ஆனது, மொத்தத்தில் தமிழன் தமிங்களன் ஆகிபோனான். மனிதனால் இப்படி கூட சிந்திக்க முடியுமா? இது உண்மை தானா.. என...