தற்சார்பு வாழ்வியல்(கதை - 'ரு')5
தற்சார்பு வாழ்வியல்(கதை - 'ரு')5
ஒரு காட்டின் கதை - 'ரு'
விலங்குகளை நீங்கள் தின்பதுவும் எல்லாம் மிக அநாகரீகமான செயல். முதலில் நீங்கள் எங்களை நிறையக் கடை திறக்க அனுமதியுங்கள். பணம் என்றால் என்ன என்று உங்கள் அனைவருக்கும் நான் சொல்லிக்கொடுக்கிறேன். இதுதான் ரூபாய். இதைக் கொண்டு போய் கடையில் கொடுத்தால் உங்கள் தேவைக்கான உணவுப் பொருட்களும், வேறு வசதிகளும், வேலையாட்களும் எல்லாம் கிடைப்பார்கள். நீங்கள் பாடுபடவே வேண்டாம். வளர்ச்சி என்பதும் முன்னேற்றம் என்பதும் நிறையப் பணம் சேர்ப்பதுதான். மற்றவை எல்லாம் வீண். ” - என்றார் திருவாளர் பொருளாதாரம்.
“சரி பணம் எங்களுக்கு எப்படிக் கிடைக்கும் ?” என்ற சிங்கத்தின் கேள்விக்கு, வாணிபம் “எதற்கும் கவலைப்படாதீர்கள். உங்கள் ஆட்சியிலுள்ள எல்லாப் பொருள்களையும் நாங்கள் வாங்கிக் கொள்வோம். உதாரணமாக ஒரு மானை வேட்டையாடி நீங்களே தின்னாமல் எங்களிடம் கொடுத்தால் நூறு ரூபாய் கொடுப்போம். அந்தப் பணத்தைக் கொண்டு போய் சந்தையில் உஙளுக்குப் பிடித்தபடி வேக வைத்த மானோ, முயலோ, இல்லை கோழிக்கறியோ எது வேண்டுமானாலும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். ஒரு மரத்தை வெட்டித் தந்தீர்களானால் 500 ருபாய் தருவோம். உங்களால் மரம் வெட்ட இயலாதென்றால் நீங்கள் அதற்கு யானைகளை அடிமை கொள்ளலாம். பழம் பறிக்கக் குரங்குகளையும், மீன் பிடித்து எங்களிடம் விற்க நாரை, கொக்கு, மீன்கொத்தி போன்ற பறவைகளையும் நீங்கள் பணிக்கு அமர்த்தலாம். அவையும் வெட்டியாய்த் திரியாமல் ஒரு நாகரீகமான வாழ்க்கை வாழலாம்; உங்கள் குடிமக்களில் ஒருவர் கூடப் பசி என்றால் என்னவென்றே தெரியாது இருப்பார்கள். எல்லாமே கடைத்தெருவில் கிடைத்து விடும். நிறையக் குடும்பங்களுக்கு வேலை கொடுத்துக் காப்பாற்றிய புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்” என்று விளக்கமளித்தார்.
இப்படியாக மேம்படுத்துதலும், வளர்ச்சியும், மனிதனும் குடி புகுந்த காடு ஒரு முப்பது வருடங்களுக்குப் பிறகு எப்படி இருந்தது? அதன் கதை என்னவாயிற்று? காலச்சுவட்டைப் புரட்டி அருகில் சென்று பார்ப்போம்.
கதை தொடரும்.......
#தற்சார்புவாழ்வியல்
#காந்தள்இயக்கம்
ஒரு காட்டின் கதை - 'ரு'
விலங்குகளை நீங்கள் தின்பதுவும் எல்லாம் மிக அநாகரீகமான செயல். முதலில் நீங்கள் எங்களை நிறையக் கடை திறக்க அனுமதியுங்கள். பணம் என்றால் என்ன என்று உங்கள் அனைவருக்கும் நான் சொல்லிக்கொடுக்கிறேன். இதுதான் ரூபாய். இதைக் கொண்டு போய் கடையில் கொடுத்தால் உங்கள் தேவைக்கான உணவுப் பொருட்களும், வேறு வசதிகளும், வேலையாட்களும் எல்லாம் கிடைப்பார்கள். நீங்கள் பாடுபடவே வேண்டாம். வளர்ச்சி என்பதும் முன்னேற்றம் என்பதும் நிறையப் பணம் சேர்ப்பதுதான். மற்றவை எல்லாம் வீண். ” - என்றார் திருவாளர் பொருளாதாரம்.
“சரி பணம் எங்களுக்கு எப்படிக் கிடைக்கும் ?” என்ற சிங்கத்தின் கேள்விக்கு, வாணிபம் “எதற்கும் கவலைப்படாதீர்கள். உங்கள் ஆட்சியிலுள்ள எல்லாப் பொருள்களையும் நாங்கள் வாங்கிக் கொள்வோம். உதாரணமாக ஒரு மானை வேட்டையாடி நீங்களே தின்னாமல் எங்களிடம் கொடுத்தால் நூறு ரூபாய் கொடுப்போம். அந்தப் பணத்தைக் கொண்டு போய் சந்தையில் உஙளுக்குப் பிடித்தபடி வேக வைத்த மானோ, முயலோ, இல்லை கோழிக்கறியோ எது வேண்டுமானாலும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். ஒரு மரத்தை வெட்டித் தந்தீர்களானால் 500 ருபாய் தருவோம். உங்களால் மரம் வெட்ட இயலாதென்றால் நீங்கள் அதற்கு யானைகளை அடிமை கொள்ளலாம். பழம் பறிக்கக் குரங்குகளையும், மீன் பிடித்து எங்களிடம் விற்க நாரை, கொக்கு, மீன்கொத்தி போன்ற பறவைகளையும் நீங்கள் பணிக்கு அமர்த்தலாம். அவையும் வெட்டியாய்த் திரியாமல் ஒரு நாகரீகமான வாழ்க்கை வாழலாம்; உங்கள் குடிமக்களில் ஒருவர் கூடப் பசி என்றால் என்னவென்றே தெரியாது இருப்பார்கள். எல்லாமே கடைத்தெருவில் கிடைத்து விடும். நிறையக் குடும்பங்களுக்கு வேலை கொடுத்துக் காப்பாற்றிய புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்” என்று விளக்கமளித்தார்.
இப்படியாக மேம்படுத்துதலும், வளர்ச்சியும், மனிதனும் குடி புகுந்த காடு ஒரு முப்பது வருடங்களுக்குப் பிறகு எப்படி இருந்தது? அதன் கதை என்னவாயிற்று? காலச்சுவட்டைப் புரட்டி அருகில் சென்று பார்ப்போம்.
கதை தொடரும்.......
#தற்சார்புவாழ்வியல்
Comments
Post a Comment