தற்சார்பு வாழ்வியல்(கதை - '௪')4

தற்சார்பு வாழ்வியல்
ஒரு காட்டின் கதை  - '௪'

வளர்ச்சி, முன்னேற்றம், வசதி மற்றும் மதிப்பு


இதற்கு ஒரு அழகிய பெண், சிங்கத்திடம் வந்து “ஐயா, அரசரே. என் பெயர் நவீனம். நான் போட்டிருக்கும் இக்கண்ணுறையின் பெயர் கறுப்புக் கண்ணாடி. இதை அணிந்தால் வெய்யிலே தெரியாது நீங்கள் அணிந்து பாருங்கள்” என்று சிங்கத்தின் மீது விழாத குறையாக அதற்குக் கண்ணாடி போட்டு விட்டாள். அதை அணிந்த சிங்கமும் “ஆம் குளிர்ச்சியாக உள்ளதே” என்று வியந்தது. அந்த மனிதப் பெண்ணின் மேல் வீசிய ஒருவித இனிய வாடையும் அரசனைக் கிறங்க அடித்தது. அப்போது கர்ஜனை செய்த அரசியின் அருகில் ஒரு உயரமான வாலிபன் சென்று , 'அரசி நீங்கள் இந்த நறுமணத் தைலத்தைப் பூசிப் பாருங்கள். உங்கள் அரசன் ஆயுளுக்கும் உங்கள் பின் அலைவார்' என்று அரசியின் மேல் ஒரு திரவியத்தைத் தெளித்தான். அரசியும் கிறங்கினாள். என் பெயர் வாணிபம் என்று அந்த இளைஞன் இனிய குரலில், பணிவுடன் அரசியிடம் அறிமுகம் செய்து கொண்டான்.

அப்பொழுது ஒரு வயதான பெரியவர், நரைத்த தலையுடன் தன்னை 'நவீன பொருளாதாரம்' என்று அறிமுகப்படுத்திக்கொண்டு அரசனைப் பார்த்து: “நீங்கள் அரசன் என்கிறீர்கள்; உங்களுக்கும் பிற சிங்கங்களுக்கும் என்ன வேறுபாடு? உங்கள் வலிமையைப் பறைசாற்ற நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்களுக்குச் சேவகர்கள் உண்டா? மாட மாளிகைகள், அரண்மனை எதுவும் உண்டா? நாளை உணவுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள்? தினம் தினம் வேட்டையாடித் தின்பதுவும் ஒரு வாழ்க்கையா? உங்கள் குடும்பத் தேவைக்கான உணவை நீங்களே வேட்டையாடுகிறீர்களே, இது காட்டுமிராண்டித்தன்மல்லவா? எப்போதும் மான், முயல் கறி தானா? நாகரீகம் என்றால் வண்ண,வண்ண உடை அணிவது, பல சுவைகளில் விதம்,விதமாய் உண்பது, உழைக்காமல் சேவகர்களை வைத்து உணவு உற்பத்தி செய்வது, பணியாட்கள் பலரை ஏவல் செய்வது, பிறர் நம்மைப் பார்த்துப் பொறாமைப்பட வைப்பது, நாலு பேர் நடுவில் கௌரவமாய், மரியாதையாய் இருப்பது, இது போன்றதுதான். அரசனான நீங்கள் இனிமேலும் இப்படி இல்லாமல் எங்களைப் போல் நாகரீகமும், முன்னேற்றமும் அடையுங்கள் - இப்படித்தான் உலகம் போய்க் கொண்டிருக்கிறது; நீங்களும் காலத்துக்கு ஏற்றபடி மாறி விடுங்கள்” என்று பலவாறாகப் போதித்தார். அவரின் குரல் வளமும், அழுத்தமும், தன்னம்பிக்கையும் சிங்க ராஜனைக் குழப்பத்தில் ஆழ்த்தின. “சரி என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள் ?” என்றார் அரசன். “அப்படிக் கேளுங்கள். முதலில் உங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்புத் தேவை. இருக்க நல்ல இட வசதியுடன் வீடு தேவை. மண்ணிலிருந்து விளையும் புல்லைத் தின்பதும், அப்புல்லைத் தின்னும்

Comments

Popular posts from this blog

தமிழ் மொழியை குழந்தைகளுக்கு கற்றுத் தருவது எப்படி?

ஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்!