Posts

Showing posts from April, 2018

தற்சார்பு வாழ்வியல் (கதை - '௩' )3

தற்சார்பு வாழ்வியல் ஒரு காட்டின் கதை  - '௩' இத்தகைய மிருகங்களைக் கண்டும் இது போன்ற வார்த்தைகளைக் கேட்டும் அறியாத சிங்கம், “நாங்கள் மிகுந்த நிறைவுடன் இருக்கிறோம். எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை. பசிக்கும் பொழுது உணவும், குடிக்க நீரும், மனைவி குழந்தைகளுடன் இனிமையான வாழ்வும், நிறைய ஓய்வும், விளையாட்டுமாய் உள்ள எங்கள் வாழ்வை நீங்கள் எப்படி இதைவிட‌ முன்னேற்றுவீர்கள் ? ” என்று கேட்டது. கதை தொடரும்....... ------------------------------------------------------------------------------------------------------------- Independent life Story of a forest - '3' A lion unaware of such animals and hearing such words, "We are very satisfied. We have no shortage. How can you improve our lives in food, drink and water, sweet life with your children, a lot of rest and play? "Asked. The story will continue......

தற்சார்பு வாழ்வியல் (கதை - 'உ' )2

தற்சார்பு வாழ்வியல் ஒரு காட்டின் கதை  - 'உ' அமைதியும், நிறைவும் கொண்ட இந்தத் 'திருப்தி' என்ற காட்டில் ஒரு நாள் ஒரு வித்தியாசமான நான்கு சக்கர வண்டி வந்தது. ஓசையும், புகையும் எழுப்பி வந்த அதில் இருந்து நான்கைந்து இரண்டு கால் பிராணிகள் இறங்கின. தங்கள் தோலிற்கு மேல் பல வண்ணங்களில் ஆடை அணிந்திருந்த அவர்கள் காலணிகள் , தலையணிகள், கண்ணுக்கு கருப்பு உறை என்றெல்லாம் அணிந்து மிக நேர்த்தியாகவும், துளியும் மேலே அழுக்கின்றியும் பளபளவென மிளிர்ந்த வண்ணம் நடந்து வந்தனர்.காட்டின் அரசனான சிங்கத்திடம் போய் “நாங்கள் மனிதர்கள். உங்கள் காட்டை மேம்படுத்தி நாகரிகமாக்குவதற்காக வந்துள்ளோம். அரசனாகிய நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்புத் தந்தால் நாங்கள் உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி உலகிலேயே மிக முன்னேறிய காடாக இதை மாற்றி விடுவோம்” என்றனர். கதை தொடரும்....... #தற்சார்புவாழ்வியல் #காந்தள்இயக்கம் #kandhaliyakkam ----------------------------------------------------------------------------------------------------------------- Independent life Story of a forest - '2' The calmnes...

தற்சார்பு வாழ்வியல் (Independent life)

தற்சார்பு வாழ்வியல்       ஒரு காட்டின் கதை  - 'க' முன்னொரு காலத்தில் திருப்தி என்றொரு காடு இருந்தது. அதில் நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும், சிங்கம், புலி, ஓநாய் போன்ற மாமிசம் உண்ணும் விலங்குகளும், மான், முயல், மாடு போன்ற தாவரம் உண்ணும் விலங்குகளும், ஓடை, ஆறு, நீர் வீழ்ச்சி, மரங்கள் அவற்றில் மீன்கள், பலவகைப் பறவைகள், பட்டாம்பூச்சிகள், மற்றும் பல்லி, பூரான், பாம்பு போன்ற ஊர்வன எல்லாம் ஒருமித்து வாழ்ந்தன. ஒன்றுக்கொன்று உணவாகவும், எதிரியாகவும் இருப்பினும், அவற்றின் வாழ்வாதாரங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. எந்த ஒரு குறிப்பிட்ட இனமும் அளவின்றிப் பெருகி விடாதபடி, ஒரு வகை சுழற்சியும், சமன்செய்யும் நிகழ்வுகளும் நடந்து கொண்டே இருந்தன. இதனைக் கதை ஆசிரியரான நாம் 'இயற்கை' என்று பெயரிடலாம். கதை தொடரும்....... #தற்சார்புவாழ்வியல் #காந்தள்இயக்கம் # k andhaliyakkam ------------------------------------------------------------------------------------------------------------------------ Independent life Story of a forest - '1' There was a forest of sat...

காந்தள் இயக்கம்(kandhal movement)

Image
தற்சார்பு இயக்கம் நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில் , மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம் தொடர்பிற்கு... எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர் , கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் #தற்சார்புவாழ்வியல்  #காந்தள்இயக்கம் #kandhaliyakkam